பதிவு செய்த நாள்
30 மார்2011
02:53
புதுடில்லி: சென்ற பிப்ரவரி மாதத்தில், முக்கிய ஆறு தொழில் துறைகள் 6.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி, சென்ற 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 4.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது.முக்கிய ஆறு தொழில் துறைகளின் கீழ், கச்சா எண்ணெய், பெட்ரோலியம் சுத்திகரிப்பு, நிலக்கரி, மின்சாரம், சிமெண்டு மற்றும் விற்பனைக்கான உருக்கு ஆகியவை இடம் பெற்றுள்ளன.நாட்டின் ஒட்டு மொத்த தொழில் துறை உற்பத்தியில், மேற்கண்ட ஆறு தொழில் துறைகளின் பங்களிப்பு 26.68 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எனவே, இந்த ஆறு தொழில் துறைகளின் வளர்ச்சி, மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இவற்றின் வளர்ச்சி, நன்கு இருக்கும் நிலையில், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருக்கும்.நடப்பு 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், முக்கிய ஆறு தொழில் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவீதம் என்ற அளவில் அமையும்.சென்ற பிப்ரவரி மாதத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் ஆகிய இரு துறைகள் முறையே 3.2 சதவீதம் மற்றும் 12.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், சென்ற 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இவ்விரு துறைகளின் வளர்ச்சி முறையே 0.7 சதவீதம் மற்றும் 4 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்திருந்தது.இதே மாதங்களில், மின்சார உற்பத்தி துறையின் வளர்ச்சி 6 சதவீதம் என்ற அளவிலிருந்து, 7.2 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது என, மத்திய தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|