காளையின் ஆதிக்கம் தொடர்கிறது...பீ.எஸ்.இ.'சென்செக்ஸ்' 178 புள்ளிகள் உயர்வுகாளையின் ஆதிக்கம் தொடர்கிறது...பீ.எஸ்.இ.'சென்செக்ஸ்' 178 புள்ளிகள் உயர்வு ... நடப்பு 2010 -11ம் நிதி ஆண்டில்பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டிய தொகை ரூ.46,267 கோடி நடப்பு 2010 -11ம் நிதி ஆண்டில்பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டிய தொகை ரூ.46,267 கோடி ...
சென்ற பிப்ரவரி மாதத்தில்ஆறு முக்கிய துறைகளின் உற்பத்தி 6.8 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2011
02:53

புதுடில்லி: சென்ற பிப்ரவரி மாதத்தில், முக்கிய ஆறு தொழில் துறைகள் 6.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி, சென்ற 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 4.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது.முக்கிய ஆறு தொழில் துறைகளின் கீழ், கச்சா எண்ணெய், பெட்ரோலியம் சுத்திகரிப்பு, நிலக்கரி, மின்சாரம், சிமெண்டு மற்றும் விற்பனைக்கான உருக்கு ஆகியவை இடம் பெற்றுள்ளன.நாட்டின் ஒட்டு மொத்த தொழில் துறை உற்பத்தியில், மேற்கண்ட ஆறு தொழில் துறைகளின் பங்களிப்பு 26.68 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எனவே, இந்த ஆறு தொழில் துறைகளின் வளர்ச்சி, மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இவற்றின் வளர்ச்சி, நன்கு இருக்கும் நிலையில், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருக்கும்.நடப்பு 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், முக்கிய ஆறு தொழில் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவீதம் என்ற அளவில் அமையும்.சென்ற பிப்ரவரி மாதத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் ஆகிய இரு துறைகள் முறையே 3.2 சதவீதம் மற்றும் 12.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், சென்ற 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இவ்விரு துறைகளின் வளர்ச்சி முறையே 0.7 சதவீதம் மற்றும் 4 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்திருந்தது.இதே மாதங்களில், மின்சார உற்பத்தி துறையின் வளர்ச்சி 6 சதவீதம் என்ற அளவிலிருந்து, 7.2 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது என, மத்திய தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)