சென்ற பிப்ரவரி மாதத்தில்ஆறு முக்கிய துறைகளின் உற்பத்தி 6.8 சதவீதம் வளர்ச்சிசென்ற பிப்ரவரி மாதத்தில்ஆறு முக்கிய துறைகளின் உற்பத்தி 6.8 சதவீதம் ... ... வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது பாஃப்னா வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது பாஃப்னா ...
நடப்பு 2010 -11ம் நிதி ஆண்டில்பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டிய தொகை ரூ.46,267 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2011
02:54

புதுடில்லி:நடப்பு 2010-11ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள் பங்கு வெளியீடுகள் வாயிலாக, 46 ஆயிரத்து 267 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.நடப்பு நிதியாண்டு நிறைவடையும் நிலையும் நிலையில், இவ்வாண்டில் இந்திய நிறுவனங்கள் மூலதன சந்தையிலிருந்து 46 ஆயிரத்து 267 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன. இதில், பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால், திரட்டப்பட்ட தொகை 60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிதியாண்டின், கடைசி காலாண்டில், நாட்டின் பங்கு வர்த்தகத்தில், ஏற்பட்ட சுணக்க நிலையால், பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை ஒத்தி போட்டன. இல்லாவிடில், இவ்வாண்டில், மூலதனச் சந்தையிலிருந்து மேலும் அதிக தொகை திரட்டப்பட்டிருக்கும் என, பிரைம் டேட்டா பேஸ் நிறுவனம் வெளி யிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.மேற்கொள்ளப்பட்ட மொத்த பங்கு வெளியீட்டு தொகையில், 27 ஆயிரத்து 537 கோடி ரூபாய் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் திரட்டப்பட்டுள்ளது. இது, மொத்த வெளியீட்டு தொகையில் 60 சதவீதமாகும்.கடந்த 2009-10ம் நிதியாண்டில், பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்பட்ட தொகை 46 ஆயிரத்து 941 கோடி ரூபாயாகும். நடப்பு நிதியாண்டின், நான்காவது காலாண்டில், பங்கு வெளியீட்டின் வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை 4,468 கோடி ரூபாய் மட்டுமே. அதே சமயம், கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், இத்தொகை 29 ஆயிரத்து 514 கோடி ரூபாயாக இருந்தது. நான்காவது காலாண்டில், பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட அதிக ஏற்ற இறக்கங்களால் தான், பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, பங்கு வெளியீட்டை மேற்கொள்ள இருந்த பல பொதுத் துறை நிறுவனங்கள், பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், பங்கு வெளியீட்டை ஒத்திபோட்டுள்ளதாக, பிரைம் டேட்டா பேஸ் குறிப்பிட்டுள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, இந்திய பங்குச் சந்தைக்கு, ஒரு பொன்னான ஆண்டாக கருதப்பட்டது. இதனால், கடந்த 2007-08ம் நிதியாண்டில், பங்கு வெளியீடுகள் வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை மிகவும் அதிகபட்சமாக, 52 ஆயிரத்து 219 கோடி ரூபாயாக இருந்தது.பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு வெளியீட்டின் மூலம், திரட்டிய 27 ஆயிரத்து 537 கோடி ரூபாயில், 22 ஆயிரத்த 763 கோடி ரூபாய், பொதுத்துறை நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டிருந்த, குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் வாயிலாக, திரட்டப்பட்டதாகும். மீதமுள்ள 4,774 கோடி ரூபாய், அந்நிறுவனங்களின் புதிய பங்குகள் வாயிலாக திரட்டப்பட்டதாகும். ஏழு பொதுத்துறை நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில், மூலதனச் சந்தையில் களம் இறங்கின. இவற்றுள் கோல் இந்தியா நிறுவனம் முதல்முறையாக, பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம் 15 ஆயிரத்து 199 கோடி ரூபாயை திரட்டி கொண்டது. இவ்வாண்டு திரட்டப்பட்ட மொத்த பங்கு வெளியீட்டு தொகையில், இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு தொகை 33 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.பொதுத்துறையைச் சேர்ந்த மங்கனீஸ் ஓர் இந்தியா (எம்.ஓ.ஐ.எல்.), சட்லஜ் ஜல் வித்யூத் நிகம் (எஸ்.ஜே.வி.என்.எல்.) மற்றும் பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க் ஆகியவை முதல் முறையாக பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களம் இறங்கியது. அதே சமயம், பவர்கிரிட், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, இன்ஜினீயர்ஸ் இந்தியா ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள், இரண்டாவது பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்டிக் கொண்டன.மொத்தம் 57 நிறுவனங்கள் பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களம் இறங்கின. இது, சென்ற நிதியாண்டில், 44 ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பங்கு வெளியீட்டில் (57), 52 புதிய பங்கு வெளியீடுகளாகும். இதன் வாயிலாக திரட்டப்பட்ட தொகை 72 சதவீதம் அல்லது 33 ஆயிரத்து 183 கோடி ரூபாயாகும்.சென்ற நிதியாண்டில் (2009-10), 39 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. இதன் வாயிலாக, 24 ஆயிரத்து 948 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளப்பட்டது.நடப்பு நிதியாண்டில், இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம், ஐந்து நிறுவனங்கள் திரட்டிய தொகை 13 ஆயிரத்து 84 கோடி ரூபாயாக உள்ளது. அதே சமயம், சென்ற நிதியாண்டில், இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொண்ட, ஐந்து நிறுவனங்கள் திரட்டிய தொகை 21 ஆயிரத்து 993 கோடி ரூபாயாக சற்று அதிகரித்து காணப்பட்டது என, பிரைம் டேட்டா பேஸ் நிறுவனம் அதன் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)