பதிவு செய்த நாள்
30 மார்2011
08:53
சென்னை : சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாஃப்னா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், 2015ம் ஆண்டிற்குள் ரூ. 500 கோடி வருமானமாக ஈட்ட திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பாஃப்னா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தங்கள் நிறுவனம், சென்னையில் 2 யூனிட்களை நிர்வகித்து வருகிறது. இதில் ஒன்று, ஏற்றுமதிக்காகவே செயல்படுகின்ற யூனிட் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு ஐரோப்பிய யூனியன், யுனைடெட் கிங்டம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்நிலையில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பொருட்டு, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் தயாரிப்புகளான பேண்ட் எய்ட், கிளியர்டிரிப், மருத்துமனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், காண்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவைகளின் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு பிராண்டை தன்வசப்படுத்த இருப்பதாக பாஃப்னா பார்மாசூட்டிகல்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|