பதிவு செய்த நாள்
30 மார்2011
13:41
சென்னை: சென்னை அருகே அமைந்துள்ள ஃபோர்டு கார் நிறுவனத்தின் இஞ்ஜின் உற்பத்தி யூனிட் திறக்கப்பட்டு 14 மாதங்களில் ஒரு லட்சம் இஞ்ஜின்களை தயாரித்து புதிய மைல்கல்லை கடந்துள்ளது. சென்னை அருகே மறைமலை நகரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய இஞ்ஜின் உற்பத்தி யூனிட் திறக்கப்பட்டது. இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் முதல் இஞ்ஜின் உற்பத்தி யூனிட், ரூ.2,250 கோடி முதலீட்டில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டது. ஆண்டுக்கு 2.5 லட்சம் இஞ்ஜின்களை தயாரிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த தொழிற்சாலையில், ஃபோர்டு கார்களுக்கு தேவையான ஐந்து வகை ட்யூராடெக் பெட்ரோல் இஞ்ஜின்களும் மற்றும் ட்யூராடார்க் டீசல் இஞ்ஜின் மாடல் ஒன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், யூனிட் செயல்பட துவங்கி 14 மாதங்களே ஆன நிலையில், ஒரு லட்சம் இஞ்ஜின்களை தயாரித்து ஃபோர்டு இஞ்ஜின் உற்பத்தி யூனிட் புதிய மைல்கல்லை கடந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|