பதிவு செய்த நாள்
01 ஏப்2011
16:12
புதுடில்லி : 2010-11ம் நிதியாண்டில் நாட்டின் காபி ஏற்றுமதி 59.34 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் 3,25,116 டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டில் 2,04,027 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய காபி போர்டு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கிய காபி உற்பத்தி நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவில் காபி உற்பத்தி பெருமளவில் கறைய துவங்கி உள்ளதை அடுத்து உலக அளவில் காபியின் தேவை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாகவே இந்தியாவில் காபி ஏற்றுமதி அதிகரித்து வருவதாகவும் இந்திய காபி ஏற்றுமதி சங்க தலைவர் ரமேஷ் ராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கே அதிகளவில் காபி ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|