பதிவு செய்த நாள்
02 ஏப்2011
10:08
புதுடில்லி : டயர் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாக, டயர்களின் விற்பனை விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பத்திரிகையாளர்களை சந்தி்த்த அப்பல்லோ டயர்ஸ் (இந்தியா) நிறுவன உயர் அதிகாரி சதீஷ் சர்மா கூறியதாவது, டயர் வர்த்தகத்தில், தாங்கள் முன்னணி வகித்து வருகிறோம். மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, டயர்களின் விலையை 6 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும்,. இந்த விலை உயர்வு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். நிறுவனம் முனனேற்றப்பாதையில் பயணித்து வருவதாகவும், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள், பயாஸ் கமர்ஷியல் வாகன டயர்களின் விற்பனை 3 சதவீதமும், டிரக் மற்றும் பஸ் ரேடியல் டயர்களின் விற்பனை 6 சதவீதம் வரையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|