பதிவு செய்த நாள்
02 ஏப்2011
12:54
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், பஸ் டிக்கெட் கட்டணம் நாளை நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக, ராஜஸ்தான் ஸ்டேட் ரோட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன் (ஆர்எஸ்ஆர்டிசி) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆர்எஸ்ஆர்டிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாநிலத்தின் அனைத்து வழித்தடங்களிலும் இயங்கும் பஸ்களின் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவில், கிலோமீட்டருக்கு 2 பைசாவும், எக்ஸ்பிரஸ் மற்றும் செமி டீலக்ஸ் பஸ்களில், கி.மீ.,க்கு 3 பைசாவும், டீலக்ஸ் மற்றும் ஏசி பஸ்களில் 5 பைசாக்களும் உயர்தத்ப்பட்டுள்ளதாக ஆர்எஸ்ஆர்டிசி தெரிவித்துள்ளது. இதன்படி, ஜெய்ப்பூரிலிருந்து புதுடில்லிக்கு டீலக்ஸ் ஏசி பஸ்களில் செல்வோர் கூடுதலாக ரூ. 25ம், வால்வோ பஸ்களில் செல்வோர் கூடுதலாக ரூ. 30ம் செலுத்த வெண்டியிருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|