பதிவு செய்த நாள்
02 ஏப்2011
16:35
மும்பை : தமிழகத்தைச் சேர்ந்த வீரர் அஸ்வின் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சேடான் வகைக் காரான வெர்னா கார், இந்திய அணி உலககோப்பையை வெல்லும் பட்சத்தில் பரிசாக வழங்க இருப்பதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹெச். டபிள்யூ.பார்க் கூறியதாவது, இந்திய அணி, உலககோப்பையை வெல்ல வேண்டும் என்பது 1.21 பில்லியன் (121 கோடி) மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய உள்ளது. இந்த உலககோப்பை வெற்றி(!) கொண்டாட்டத்தில் தங்கள் நிறுவனமும் பங்கேற்கும் பொருட்டு, சச்சின், தோனி, அஸ்வின் உள்ளிட்ட அணிவீரர்களுக்கு இந்தியாவில் பெயரளவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை விற்பனைக்கு வராத தங்களது நிறுவன சேடான் வகைக் காரான வெர்னாவை பரிசளிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்திய வீரர்களை கவுரவிப்பதோடு தாங்கள் நின்றுவிடாமல், இந்திய அணியின் வெற்றியை ரசிகர்களாகிய அனைவரும் பெரிய திரையில் கண்டுகளிக்கும் வண்ணம், டிலலி, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள மால்களில் கிரிக்கெட்டை பெரிய திரையில் காண தங்கள் நிறுவனம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|