அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.110 கோடி சரிவுஅன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.110 கோடி சரிவு ... எல் அண்டு டி பைனான்ஸ்பங்கு வெளியீட்டின் மூலம்  ரூ.1,750 கோடி திரட்ட திட்டம் எல் அண்டு டி பைனான்ஸ்பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.1,750 கோடி திரட்ட திட்டம் ...
பூண்டு உற்பத்தி அதிகரிப்புஉள்நாட்டில் விலை குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2011
06:25

கொச்சி:பூண்டு உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை தற்@பாது குறைந்துள்ளது. கடந்த ஆண்டில், பருவ மழை தவறியதால் நாட்டின் பூண்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை 300 ரூபாய் வரை அதிகரித்திருந்தது. தற்@பாது உற்பத்தி அதிகரித்துள்ளதை அடுத்து ஒரு கிலோ பூண்டின் விலை 90 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் பூண்டிற்கு நல்ல விலை கிடைப்பதால் வர்த்தகர்கள் அதிகளவில் பூண்டு ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து, வங்கதேசத்திற்கு அதிகளவில் பூண்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சீனாவில் பூண்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் அதன் அளிப்பு குறைந்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நம் நாடு, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் அதிகளவில் பூண்டு ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், இந்தியாவின் பூண்டு ஏற்றுமதி, அளவின் அடிப்படையில் 66 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 138 சதவீதமும் அதிகரித்துள்ளது.இந்தியாவில் பூண்டு சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்ததன் காரணமாகவும், விளைச்சலுக்கேற்ற காலநிலை காணப்படுவதாலும், நடப்பாண்டில், நாட்டின் பூண்டு விளைச்சல் ஆண்டிற்கு 10 லட்Œம் டன்னாக இருக்கும் என, இந்திய நறுமணப் பொருள்கள் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.இந்நிலையில், இடு பொருள்கள் விலை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் பூண்டு உற்பத்தி செலவு உயர்ந்து வருவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)