பதிவு செய்த நாள்
03 ஏப்2011
06:25
கொச்சி:பூண்டு உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை தற்@பாது குறைந்துள்ளது. கடந்த ஆண்டில், பருவ மழை தவறியதால் நாட்டின் பூண்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை 300 ரூபாய் வரை அதிகரித்திருந்தது. தற்@பாது உற்பத்தி அதிகரித்துள்ளதை அடுத்து ஒரு கிலோ பூண்டின் விலை 90 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் பூண்டிற்கு நல்ல விலை கிடைப்பதால் வர்த்தகர்கள் அதிகளவில் பூண்டு ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து, வங்கதேசத்திற்கு அதிகளவில் பூண்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சீனாவில் பூண்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் அதன் அளிப்பு குறைந்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நம் நாடு, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் அதிகளவில் பூண்டு ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், இந்தியாவின் பூண்டு ஏற்றுமதி, அளவின் அடிப்படையில் 66 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 138 சதவீதமும் அதிகரித்துள்ளது.இந்தியாவில் பூண்டு சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்ததன் காரணமாகவும், விளைச்சலுக்கேற்ற காலநிலை காணப்படுவதாலும், நடப்பாண்டில், நாட்டின் பூண்டு விளைச்சல் ஆண்டிற்கு 10 லட்Œம் டன்னாக இருக்கும் என, இந்திய நறுமணப் பொருள்கள் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.இந்நிலையில், இடு பொருள்கள் விலை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் பூண்டு உற்பத்தி செலவு உயர்ந்து வருவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|