பதிவு செய்த நாள்
03 ஏப்2011
06:26
மும்பை:எல் அண்டு டி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட, எல் அண்டு டி பைனான்ஸ் நிறுவனம், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதன சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி வேண்டி இந்நிறுவனம், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'க்கு விண்ணப்பித்துள்ளது.எல் அண்டு டி மியூச்சுவல் பண்டு நிறுவனத்திற்கு சொந்தமானது எல் அண்டு டி பைனான்ஸ். இந்நிறுவனம், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிடுவதன் வாயிலாக, 1,750 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில், 125 கோடி ரூபாய், எல் அண்டு டி நிறுவனத்தின் பங்குதாரர்களிடமிருந்து திரட்ட முடிவு செய்துள்ளது.எல் அண்டு டி பைனான்ஸ் நிறுவனம், எல் அண்டு டி நிறுவனம் செலுத்தியுள்ள 345 கோடி ரூபாய் டிபாசிட் தொகையை திரும்ப அளிக்கவும், இதன் இரண்டு துணை நிறுவனங்களுக்கு முறையே, 570 கோடி மற்றும் 535 கோடி ரூபாய் மூலதனம் அளிக்கவும், இந்த பங்கு வெளி யீட்டின் மூலம் திரட்டும் தொகையை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.எல் அண்டு டி பைனா ன்ஸ் நிறுவனம், பெடரல் பேங்க் மற்றும் சிட்டி யூனியன் பேங்க் ஆகிய இரு வங்கிகளிலும், 5 சதவீதத்திற்கும் குறைவாக பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. மேலும், இன்வென்ட் அசட் ரிகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில், 8.9 சதவீத பங்கு மூலதனத்தையும், என்.ஏ.சி. இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் அண்டு எகியூப்மென்ட் நிறுவனத்தில், 30 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|