பதிவு செய்த நாள்
03 ஏப்2011
09:18
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில், பருப்பு, பயறு விலை, மூட்டைக்கு 200 முதல் 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.விருதுநகரில் சர்க்கரை விலை, மூட்டைக்கு 2,795 ரூபாயாக உள்ளது. கடலெண்ணெய் டின்னுக்கு(15 கிலோ) 1,180 லிருந்து 1,200 ஆக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் 1,120 ஆகவும், பாமாயில் 900 ரூபாயாகவும் உள்ளது. நிலக்கடலை பருப்பு 3,600 ஆகவும், கடலை புண்ணாக்கு மூட்டை 2,600லிருந்து 2,700 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.பருப்பு: நயம் உளுந்து விலை மூட்டைக்கு 4,900 லிருந்து 5,300 ரூபாயாக உயர்ந்துள்ளது. சுமார் ரகம் 4,100 லிருந்து 4,300 வரையும், பர்மா பருவட்டு 4,800 லிருந்து 5,300 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. நயம் உளுந்தம் பருப்பு 6,500 லிருந்து 6,800 ஆகவும், பர்மா பருவட்டு 5,600 லிருந்து 5,800 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. துவரை 4,400 லிருந்து 4,800 ஆகவும், பொடி துவரை 3,400 லிருந்து 3,800 ஆகவும், துவரம் பருப்பு 6,000 லிருந்து 6,200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பொடி துவரம் பருப்பு 4,800 ஆகவும், பாசிப்பயறு 4,400 லிருந்து 4,300 ஆகவும், லயன் பருவட்டு 4,900 ஆகவும், சுமார் ரகம் 3,700 ரூபாயாகவும் உள்ளது. பாசிப்பருப்பு 6,200 ஆகவும், சுமார் ரகம் 5,600 லிருந்து 5,900 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பருப்பு மார்க்கெட் சூடுபிடித்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மைதா 2,180 ஆகவும், ரவை 2,260 ஆகவும், கொண்டைக்கடலை 2,700 ஆகவும் பொரிகடலை 2,050 ரூபாயாகவும் உள்ளது.மிளகாய் வத்தல்: புது வத்தல் 7,500 லிருந்து 7,800 ஆகவும், முண்டு வத்தல் 7,100 லிருந்து7,500 ரூபாயாகவும் உள்ளது. சோடை வத்தல் 3,000 ரூபாயாகவும், பழைய சோடை வத்தல் 2,500 ரூபாயாகவும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|