பதிவு செய்த நாள்
06 ஏப்2011
12:57
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி வாகனங்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தக நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம், மார்ச் மாதத்தில், விற்பனை 21 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் மாதத்தில், தங்கள் நிறுவனம் 12,168 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. நிறுவன வரலாற்றிலேயே, அதிகளவு விற்பனையானது இந்த மாதத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 2010-11ம் நிதியாண்டில், நிறுவன மொத்த விற்பனை 94,105 எனவும், 2009-10 ம்ஆண்டில் ( 63,926) விற்பனையானதைக் காட்டிலும் இது 47 சதவீதம் அதிகமாகும். நிறுவன உள்நாட்டு விற்பனை 22 சதவீதம் அதிகரித்து 11,312 என்ற அளவிலும், ஏற்றுமதி 12 சதவீதம் அதிகரித்து 856 என்ற அளவிலும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|