பதிவு செய்த நாள்
06 ஏப்2011
13:32
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் மின் நுகர்வோர்கள்,தங்களது மின் கட்டணத்தை செலுத்தலாம். தமிழ்நாடு அஞ்சல்வட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி குறைந்த அழுத்த மின் நுகர்வோர், தமிழகம் மற்றும் சென்னையில், தேர்ந்தெடுக்கப்பட்ட தபால்நிலையத்தில், தங்கள் மின் கட்டணங்களை செலுத்தும் வசதி, 192 தபால்நிலையங்களில் உள்ளது. இந்நிலையில், இந்த வசதி, இன்று முதல் அனைத்து கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட தபால் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. மின் நுகர்வோர், தேர்வு செய்யப்பட்ட எந்தவொரு தபால் நிலையத்தையும் அணுகி, தங்கள் மின் கட்டணஅட்டையை காண்பித்து கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதற்கான சேவைக்கட்டணம் ஐந்து ரூபாயாகும். கூடுதல் விவரங்கள் ' டபிள்யூடபிள்யூடபிள்யூ.தமிழ்நாடுபோஸ்ட்.என்ஐசி.இன் என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|