பதிவு செய்த நாள்
06 ஏப்2011
14:49
புனே : 2011ம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டததில், தங்கள் நிறுவன விற்பனை 67 சதவீதம் அதிகரித்து 2,135 யூனிட்கள் என்ற அளவை எட்டியுள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஜனவரி முதல் மார்ச் மாத வரையிலான காலத்தில் 2,135 கார்களை விற்பனை செய்துள்ளது மிகப்பெரிய சாதனை என்றும், சி பிரிவு வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 150 சதவீதமும், ஈ- பிரிவு வாகனங்களின் விற்பனை 19 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த ஆண்டின் இதேகாலகட்டத்தில் 20 கார்கள் என்ற அளவிலேயே விற்பனையாகி இருந்த எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை, இந்தாண்டில் 104 என்ற அளவிற்கு அதிகரித்திருப்பது நிறுவனத்தை மகிழ்ச்சியடைய வைத்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|