பதிவு செய்த நாள்
10 ஏப்2011
04:55
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் விலை டின்னுக்கு 30 ரூபாயும், நிலக்கடலை பருப்பு மூடைக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது.விருதுநகரில் சர்க்கரை விலை மூடைக்கு 2,795 ரூபாயாக உள்ளது. கடலெண்ணெய் டின்னுக்கு 1,200லிருந்து 1,230 ஆக உயர்ந்துள்ளது. சூரிய காந்தி எண்ணெய் 1,120 ஆகவும், பாமாயில் 900 ரூபாயாக உள்ளது. நிலக்கடலைப் பருப்பு 3,600லிருந்து 3,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடலைப் புண்ணாக்கு மூடை 2,600 லிருந்து 2,700 ஆக உயர்ந்துள்ளது. கடலை பருப்பு வரத்து குறைந்ததால் நிலக்கடலை பருப்பும், கடலை எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பருப்பு: உளுந்து விலை மூடைக்கு 4,900 லிருந்து 5,200 ரூபாயாக உள்ளது. சுமார் ரகம் 4,100 லிருந்து 4,200 வரையும், பர்மா பருவட்டு 5,200 ஆக உள்ளது. நயம் உளுந்தம் பருப்பு 6,800 ஆகவும், பர்மா பருவட்டு 5,250 ரூபாயாக உள்ளது.துவரை 4,400 லிருந்து 4,800 ஆகவும், பொடி துவரை 3,800 ஆகவும், துவரம் பருப்பு 6,000 லிருந்து6,200 ரூபாயாகவுள்ளது. பொடி துவரம் பருப்பு 4,800 ஆகவும், பாசிப்பயறு 4,400 லிருந்து 4,300 ஆகவும், லயன் பருவட்டு 4,900 ஆகவும், சுமார் ரகம் 3,700 ரூபாயாகவும் உள்ளது.பாசிப்பருப்பு 6,200 ஆகவும், சுமார் ரகம் 5,600லிருந்து 5,900 ரூபாயாக உள்ளது. பருப்பு மார்க்கெட்டில் பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். மைதா 2,180 ஆகவும், ரவை 2,260 ஆகவும் கொண்டைக்கடலை 2,700 ஆகவும், பொரிகடலை 2,050 ரூபாயாக உள்ளது. வத்தல்: புது வத்தல் 7,500 லிருந்து 8000 ஆகவும், முண்டு வத்தல் 7,000லிருந்து 7,500 ஆகவும், சோடை வத்தல் 3,000 ஆகவும், பழைய சோடை வத்தல் 2,500 ரூபாயாகவும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|