பதிவு செய்த நாள்
10 ஏப்2011
04:56
பெங்களூரு: தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) படிப்பை முடித்து விட்டு வரும் பொறியியல் பட்டதாரிகளில், 25 சதவீதம் பேர்தான் உடனடியாக வேலை செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக உள்ளனர் என்று, 'நாஸ்காம்' அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வறிக்கையில், நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சத்து 50 ஆயிரம் பொறியியல் மாணவர்கள் படிப்பை முடித்து வருவதாகவும், அதில், 10 முதல் 25 சதவீதம் பேர், உடனடியாக எந்த தொழில்நுட்ப நிறுவனத்திலும் பணியாற்ற முடியாத அளவிற்கு திறன் குறைந்தவர்களாக உள்ளனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி. பட்டதாரிகளில் 25 சதவீதம் பேர் தான், உடனடியாக வேலை பார்க்கும் திறன் பெற்றவர்களாக உள்ளனர். இதில், அலுவலகத்தின் முக்கிய பணிகளை செய்வோரின் பங்களிப்பு 15சதவீதமாக உள்ளது.கற்ற கல்விக்கும், வேலைக்கும் இடையே இத்தகைய இடைவெளி ஏற்பட, தரமற்ற கல்வி அல்லது முறையான பயிற்சியின்மை ஆகியவை தான் முக்கிய காரணம். இதனால்தான், கல்லூரி மூலம் தேர்வு செய்யப்படும் பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்க, ஆண்டுக்கு, 4,800 கோடி ரூபாயை ஐ.டி. துறை நிறுவனங்கள் செலவழிக்கின்றன.இருந்தபோதிலும், கடந்த ஆறு ஆண்டுகளில் உடனடியாக பணியாற்றும் திறன் பெற்ற இளம் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை, 1 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 25 சதவீதம் என்ற அளவை எட்டியுள்ளது. வெளி நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்த வேலைவாய்ப்பு சதவீதம் மிகக் குறைவானது. வெளிநாடுகளில் கல்வித் தரம் உயர்வாக உள்ளபோதிலும், திறன் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக@வ உள்ளது என, நாஸ்காம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகளின் பணித்திறனை அடையாளம் காண்பதற்காக, நாஸ்காம், இரண்டு பொது மதிப்பீட்டு தேர்வுகளை நடத்தி வருகிறது. குறிப்பாக, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படும் 45 நிமிடத் @தர்வில், எழுத்து, பேச்சு, ஆய்வுத்திறன் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்படுகிறது. பேசுவதில் திறன் குறைந்தும், ஆனால், ஆய்வுத் திறனில் சிறந்தும் விளங்கும் மாணவர்களுக்கு ஐ.டி. நிறுவனங்களில் பீ.பி.ஓ. பிரிவில் @வலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.நாட்டில், ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. துறை நிறுவனங்கள் தற்போது பொறியியல் சாராத பட்டதாரிகளையும், அதிகளவில் பணிக்கு நியமித்து வருகின்றன. இந்தியாவில், ஆண்டுதோறும் வெளிவரும் 30 லட்சம் பட்டதாரிகளில், 2 லட்சத்து 40 ஆயிரம் @பரை இத்துறை நிறுவனங்கள் பணிக்கு தேர்ந்தெடுத்து வருகின்றன. டி.சி.எஸ். - விப்ரோ, எச்.சி.எல். நிறுவனங்களில் இத்தகைய பட்டதாரிகளின் எண்ணிக்கை, தற்போது 10 சதவீதமாக உள்ளது. இது, அடுத்த ஓரிரு ஆண்டுகளில் 25 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|