பதிவு செய்த நாள்
10 ஏப்2011
04:58
கோல்கட்டா:சர்வதேச சந்தையில், தேயிலை விலை அதிகரித்து வருகிறது. இதன் தாக்கத்தால், இந்திய சந்தையிலும், தேயிலை விலை 29 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. உலகளவில் தேயிலை உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்தில் உள்ளது.õட்டில், தற்போது, புதிய பருவத்தில் விளைந்த உயர்ரக தேயிலை விலை 29 சதவீதம் அதிகரித்து, ஒரு கி@லா 200 முதல் 213 ரூபாய் என்ற அளவில் விலை போகிறது. சென்ற ஆண்டில், கிலோ 155 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.அதே நேரத்தில், சாதாரண சி.டி.சி. வகை தேயிலையின் விலையும் 15 சதவீதம் அதிகரித்து, கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனையாகிறது. சென்ற ஆண்டின் இதே காலத்தில், இது 130 முதல் 150 ரூபாய்வரை விலை போனது. நாட்டின் தேயிலை உற்பத்தி நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 8 கோடி கிலோவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவில், தனிநபர் தேயிலை பயன்பாடு ஆண்டுக்குசராசரியாக 800 கிராம் என்ற அளவில் உள்ளது. இது, இங்கிலாந்தில் 2.50 கிலோ, அயர்லாந்தில் 1.50 கிலோ, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் தலா 1.20 கிலோவாக உள்ளது. பாகிஸ்தானில் தனிநபர் தேயிலை பயன்பாடு ஆண்டுக்கு சராசரியாக 950 கிராம் என்ற அளவில் உள்ளது.இந்தியாவில், தேயிலை பயன்பாடு ஆண்டுக்கு சராசரியாக 3 முதல் 3.5 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில், தேயிலைக்கான தேவைப்பாடு மற்றும் விலை அதிகரித்தை தொடர்ந்து, இந்தியாவிலும் தேயிலையின் விலை உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|