ஓ.என்.ஜி.சி. நிறுவனம்எரிவாயு உற்பத்தியை தனியாரிடம் வழங்குகிறதுஓ.என்.ஜி.சி. நிறுவனம்எரிவாயு உற்பத்தியை தனியாரிடம் வழங்குகிறது ... நாட்டின் அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.9,200 கோடி உயர்வு நாட்டின் அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.9,200 கோடி உயர்வு ...
உற்பத்தி குறைவால் தேயிலை விலை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2011
04:58

கோல்கட்டா:சர்வதேச சந்தையில், தேயிலை விலை அதிகரித்து வருகிறது. இதன் தாக்கத்தால், இந்திய சந்தையிலும், தேயிலை விலை 29 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. உலகளவில் தேயிலை உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்தில் உள்ளது.õட்டில், தற்போது, புதிய பருவத்தில் விளைந்த உயர்ரக தேயிலை விலை 29 சதவீதம் அதிகரித்து, ஒரு கி@லா 200 முதல் 213 ரூபாய் என்ற அளவில் விலை போகிறது. சென்ற ஆண்டில், கிலோ 155 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.அதே நேரத்தில், சாதாரண சி.டி.சி. வகை தேயிலையின் விலையும் 15 சதவீதம் அதிகரித்து, கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனையாகிறது. சென்ற ஆண்டின் இதே காலத்தில், இது 130 முதல் 150 ரூபாய்வரை விலை போனது. நாட்டின் தேயிலை உற்பத்தி நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 8 கோடி கிலோவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியாவில், தனிநபர் தேயிலை பயன்பாடு ஆண்டுக்குசராசரியாக 800 கிராம் என்ற அளவில் உள்ளது. இது, இங்கிலாந்தில் 2.50 கிலோ, அயர்லாந்தில் 1.50 கிலோ, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் தலா 1.20 கிலோவாக உள்ளது. பாகிஸ்தானில் தனிநபர் தேயிலை பயன்பாடு ஆண்டுக்கு சராசரியாக 950 கிராம் என்ற அளவில் உள்ளது.இந்தியாவில், தேயிலை பயன்பாடு ஆண்டுக்கு சராசரியாக 3 முதல் 3.5 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில், தேயிலைக்கான தேவைப்பாடு மற்றும் விலை அதிகரித்தை தொடர்ந்து, இந்தியாவிலும் தேயிலையின் விலை உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)