பதிவு செய்த நாள்
10 ஏப்2011
04:58
புதுடில்லி:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 1ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 200 கோடி டாலர் (9,200 கோடி ரூபாய்) அதிகரித்து, 30 ஆயிரத்து 548 கோடி டாலராக (14 லட்சத்து 5,208 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, சென்ற மார்ச் 25ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 2.40 கோடி டாலர் (110.40 கோடி ரூபாய்) சரிவடைந்து, 30 ஆயிரத்து 348 கோடி டாலராக (13 லட்சத்து 96 ஆயிரத்து 8 கோடி ரூபாய்) குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதே காலத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு 132.10 கோடி டாலர் (6,077 கோடி ரூபாய்) அதிகரித்து, 27 ஆயிரத்து 502 கோடி டாலராக (12 லட்சத்து 65 ஆயிரத்து 92 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.கையிருப்பில், உள்ள தங்கத்தின் மதிப்பு 82.90 கோடி டாலர் (3,813 கோடி ரூபாய்) உயர்ந்து, 2,297 கோடி டாலராக (1 லட்சத்து 5 ஆயிரத்து 662 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலவாணிகளின் மதிப்பு 53 கோடி டாலர் (2,438 கோடி ரூபாய்) அதிகரித்து, 293.90 கோடி டாலராக (13 ஆயிரத்து 519 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. சென்ற வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பில் ஏற்பட்ட மாறுதல்களை தொடர்ந்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|