நாட்டின் அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.9,200 கோடி உயர்வுநாட்டின் அன்னியச் செலாவணிகையிருப்பு ரூ.9,200 கோடி உயர்வு ... சென்ற 2010 -11ம் நிதியாண்டில்ரூ.8,220 கோடிக்கு புண்ணாக்கு ஏற்றுமதி சென்ற 2010 -11ம் நிதியாண்டில்ரூ.8,220 கோடிக்கு புண்ணாக்கு ஏற்றுமதி ...
10 சதவீத உற்பத்தி வரியால்சணல் தொழில் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2011
04:59

கோல்கட்டா:மத்திய அரசு, சணல் பொருள்கள் மீது 10 சதவீத உற்பத்தி வரி விதித்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய்வர்த்தகத்தை கொண்டுள்ள சணல் தொழிலில், சணல் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 80 சதவீத தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 2.50 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.மேலும், பேக்கேஜிங் துறைக்கானசணல் பொருள்களின் தயாரிப்பு செலவும் வெகுவாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே உற்பத்தி வரி விதிக்கப்பட்ட ஜவுளி மற்றும் பிராண்டட் ஆடைகள் பிரிவின் கீழ் சணல் கொண்டுவரப்பட்டிருப்பது அமைச்சகத்தின் கவனக்குறைவில் நிகழ்ந்திருக்கலாம் என, சணல் துறையை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உற்பத்தி வரி குறித்த அரசாணையால், அனைத்து சணல் பொருள்களின் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, சென்ற மார்ச் 1ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பிராண்டட் சணல் பொருள்கள் மீது 10 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சணல் பொருள்களை பிராண்டு வாரியாக பிரிக்கும் பணி உள்ளதால், உற்பத்தி வரியை திரும்ப பெற வேண்டும் என்று சணல் வாரிய ஆணையாளர், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.எனினும் பிராண்டட் மற்றும் பிராண்டட் அல்லாத அனைத்து சணல் பொருள்களுக்கும் வரிவிதிப்பு பொருந்தும் என்று, மார்ச் 24ம் தேதி மற்றொரு அரசாணை வெளியிடப்பட்டதாக இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே,சணல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றும் வகையில், 10 சதவீத உற்பத்தி வரியை விலக்கி கொள்ள வேண்டும் என, இந்திய சணல் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)