பதிவு செய்த நாள்
10 ஏப்2011
04:59
கோல்கட்டா:மத்திய அரசு, சணல் பொருள்கள் மீது 10 சதவீத உற்பத்தி வரி விதித்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய்வர்த்தகத்தை கொண்டுள்ள சணல் தொழிலில், சணல் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 80 சதவீத தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 2.50 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.மேலும், பேக்கேஜிங் துறைக்கானசணல் பொருள்களின் தயாரிப்பு செலவும் வெகுவாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே உற்பத்தி வரி விதிக்கப்பட்ட ஜவுளி மற்றும் பிராண்டட் ஆடைகள் பிரிவின் கீழ் சணல் கொண்டுவரப்பட்டிருப்பது அமைச்சகத்தின் கவனக்குறைவில் நிகழ்ந்திருக்கலாம் என, சணல் துறையை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உற்பத்தி வரி குறித்த அரசாணையால், அனைத்து சணல் பொருள்களின் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, சென்ற மார்ச் 1ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பிராண்டட் சணல் பொருள்கள் மீது 10 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சணல் பொருள்களை பிராண்டு வாரியாக பிரிக்கும் பணி உள்ளதால், உற்பத்தி வரியை திரும்ப பெற வேண்டும் என்று சணல் வாரிய ஆணையாளர், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.எனினும் பிராண்டட் மற்றும் பிராண்டட் அல்லாத அனைத்து சணல் பொருள்களுக்கும் வரிவிதிப்பு பொருந்தும் என்று, மார்ச் 24ம் தேதி மற்றொரு அரசாணை வெளியிடப்பட்டதாக இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே,சணல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்றும் வகையில், 10 சதவீத உற்பத்தி வரியை விலக்கி கொள்ள வேண்டும் என, இந்திய சணல் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|