பதிவு செய்த நாள்
10 ஏப்2011
10:26
பொள்ளாச்சி:தேங்காய், கொப்பரை வரத்து அதிகரிக்காததால், மார்க்கெட்டில் விலை உயர்ந்து வருகிறது.கடந்த 2ம் தேதி நிலவரப் படி, காங்கேயம் மார்க்கெட்டில், கொப்பரை கிலோவுக்கு 63 - 65 ரூபாய் வரை விலை கிடைத்தது. தேங்காய் எண்ணெய், 15 கிலோ டின்னுக்கு 1,380, தேங்காய் பவுடர் கிலோவுக்கு 103 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. விவசாயிகள், சொந்தப் பொறுப்பில் பறித்து உரித்த தேங்காய் (மட்டை தவிர), டன்னுக்கு 18 ஆயிரம், சென்னை உட்பட பகுதிகளுக்கு அனுப்பப்படும் தேங்காய், டன்னுக்கு 17 ஆயிரம் விலை வழங்கப்பட்டது. விவசாயிகள் பறித்து இருப்பு வைத்துள்ள தேங்காய் ஒன்றுக்கு 11, சொந்தப் பொறுப்பில் பறித்துக் கொள்ள 10 ரூபாய் வழங்கப்பட்டது.நேற்றைய நிலவரப் படி, கொப்பரை கிலோவுக்கு 66- 67.50 ரூபாய், தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1,480, தேங்காய் பவுடர் கிலோவுக்கு 112 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. விவசாயிகள், சொந்தப் பொறுப்பில் பறித்து உரித்த தேங்காய் (மட்டைதவிர), டன்னுக்கு 18 ஆயிரம் முதல் 18 ஆயிரத்து 500 ரூபாய், பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் இருந்து, சென்னை உட்பட பகுதிகளுக்கு அனுப்பப்படும் தேங்காய் டன்னுக்கு 17 ஆயிரத்து 500 விலை கிடைத்தது. கொப்பரை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில், தேவைக்கேற்ப கொப்பரை வரத்து இல்லாததால், விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கொப்பரை கிலோவுக்கு 2.50, தேங்காய் டன்னுக்கு 500 விலை உயர்ந்துள்ளது' என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|