என்.எம்.டி.சி. இரும்புத் தாது உற்பத்தி 6சதவீதம் அதிகரிப்புஎன்.எம்.டி.சி. இரும்புத் தாது உற்பத்தி 6சதவீதம் அதிகரிப்பு ... நிலக்கடலை மூட்டைக்கு ரூ.300 உயர்வு நிலக்கடலை மூட்டைக்கு ரூ.300 உயர்வு ...
வங்கிகள் மீது புகார்: விரைந்து நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2011
00:15

சென்னை: வங்கிகள் மீதான வாடிக்கையாளர்களின் குறைபாடுகளை விரைந்து கவனிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கி துறை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. வங்கி செயல்பாடுகள் பெருகப் பெருக, அது சார்ந்த குறைபாடுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. வங்கி சேவையில் குறைபாடு, குறிப்பிட்ட நாளில் ஓய்வூதியம் வழங்காமை, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பான குறைகள் முதலில் சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளில் தெரிவிக்க வேண்டும்.அங்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், மண்டல அலுவலகத்தை நாடலாம். அங்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், வங்கி தீர்ப்பாயங்களை நாடி புகார் தெரிவிக்கலாம். வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை உடனுக்குடன் கவனித்து தகுந்த தீர்வை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி, நாட்டில் 15 இடங்களில் வங்கி தீர்ப்பாய மையங்களை அமைத்துள்ளது.இதன்படி, சென்னையில் செயல்படும் வங்கி தீர்ப்பாயத்தில் கடந்த 2009-10ம் நிதியாண்டில், 12,727 புகார் மனுக்கள் வந்துள்ளன. இது நாட்டில் வேறு எந்த தீர்ப்பாய மையத்திலும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகம். நாட்டின் இதர மையங்களையும் சேர்த்து மொத்தம் பதிவான புகார்களில் சென்னை மையத்தின் பங்களிப்பு 16 சதவீதம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதை தொடர்ந்து, புகார்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கியின் பிராந்திய அலுவலர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் வங்கி தீர்ப்பாய உயரதிகாரிகள் அடிக்கடி ஆலோசனை கூட்டங்கள் நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காண துவங்கினர். இந்த நடவடிக்கைகளால், மாதத்திற்கு 1,000 புகார்கள் வந்த நிலை மாறி, தற்போது 700 புகார்கள் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.அவ்வப்போது வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுவதால், வங்கி செயல்பாடுகளில் காணப்படும் குறைபாடுகள் களையப்பட்டு, வாடிக்கையாளர் சேவை மேம்படுகிறது. இதன் காரணமாகவும் வங்கி தீர்ப்பாயத்திற்கு வரும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.வங்கி சார்ந்த புகார்களை தெரிவிக்க வாடிக்கையாளர் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், ஒரு புகார் மனு மீதான தீர்வுக்கு ரிசர்வ் வங்கி சராசரியாக 2,368 ரூபாய் செலவிடுகிறது. மேலும், நாட்டில் உள்ள 15 வங்கி தீர்ப்பாயங்களின் செயல்பாட்டிற்கு ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்குகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)