சீரான வேகத்தில் நாட்டின் தொழில் உற்பத்தி சீரான வேகத்தில் நாட்டின் தொழில் உற்பத்தி ... இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் பணியில் டாடா பவர் இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் பணியில் டாடா பவர் ...
நானோ கார் உற்பத்தியை அதிகரிக்கிறது டாடா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2011
12:50

மும்பை : உலகின் மிகக்குறைந்த விலைக் காரன டாடா நிறுவனத்தின் நானோ கார் மீண்டும் உச்சபட்ச வேகத்தில் பயணிக்கத் துவங்கியுள்ளதையடுத்து, அதன் உற்பத்தியை 2 ம‌டங்காக அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் மாதத்தி்ல் மட்டும், 8,707 நானோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் ஜலை மாதத்தில், 9 ஆயிரம் கார்கள் விற்பனை செய்ததே அதிகபட்சமாக இருந்தது. அதன்பின்னர் பல்வேறு சோதனைகளை தங்கள் நிறுவனம் சந்தித்தது நாடறிந்ததே.இந்நிலையில், மார்ச் மாதத்தில் கார் விற்பனை அதிகரித்துள்ளது தங்களுக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த நிதியாண்டின் மாதங்களில் 20 ஆயிரம் கார்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்காரணமாக, கார் உற்பத்தியை 2 மடங்கு அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நானோ கார் விற்பனை அதிகரித்துள்ள ‌போதிலும், இண்டிகா காரின விற்பனை இறங்குமுகத்தில் செல்வது நிறுவனத்தை கவலை கொள்ள செய்திருக்கிறது. மார்ச் மாதத்தில், 6,937 இண்டிகா கார்கள் ‌விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 40 சதவீதம் குறைவு ஆகும். தங்கள் நிறுவனம் , புதிதாக இவி2 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், விற்பனையில் தங்கள் நிறுவனத்தை முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)