பதிவு செய்த நாள்
11 ஏப்2011
12:50
மும்பை : உலகின் மிகக்குறைந்த விலைக் காரன டாடா நிறுவனத்தின் நானோ கார் மீண்டும் உச்சபட்ச வேகத்தில் பயணிக்கத் துவங்கியுள்ளதையடுத்து, அதன் உற்பத்தியை 2 மடங்காக அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மார்ச் மாதத்தி்ல் மட்டும், 8,707 நானோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் ஜலை மாதத்தில், 9 ஆயிரம் கார்கள் விற்பனை செய்ததே அதிகபட்சமாக இருந்தது. அதன்பின்னர் பல்வேறு சோதனைகளை தங்கள் நிறுவனம் சந்தித்தது நாடறிந்ததே.இந்நிலையில், மார்ச் மாதத்தில் கார் விற்பனை அதிகரித்துள்ளது தங்களுக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த நிதியாண்டின் மாதங்களில் 20 ஆயிரம் கார்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்காரணமாக, கார் உற்பத்தியை 2 மடங்கு அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நானோ கார் விற்பனை அதிகரித்துள்ள போதிலும், இண்டிகா காரின விற்பனை இறங்குமுகத்தில் செல்வது நிறுவனத்தை கவலை கொள்ள செய்திருக்கிறது. மார்ச் மாதத்தில், 6,937 இண்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 40 சதவீதம் குறைவு ஆகும். தங்கள் நிறுவனம் , புதிதாக இவி2 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், விற்பனையில் தங்கள் நிறுவனத்தை முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|