'பியஸ்டா கிளாசிக்' கார் : போர்டு இந்தியா அறிமுகம்'பியஸ்டா கிளாசிக்' கார் : போர்டு இந்தியா அறிமுகம் ... தேயிலை ஏற்றுமதி 11 சதவீதம் சரிவு தேயிலை ஏற்றுமதி 11 சதவீதம் சரிவு ...
‌தாயை முந்தும் பிள்ளை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2011
16:37

புதுடில்லி : தாய் எட்டடி பாய்ந்தால், பிள்ளை பதினாறடி பாயும் என்பதற்கு எது எடுத்துக்காட்டாக இருக்குமோ இல்லையோ, எல்ஜி நிறுவனம் சிறந்த உதாரணமாக இருக்கிறது. தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு, எலெக்ட்ரானிக் உபகரணங்கள், மொபைல்போன்கள் உள்ளிட்டவைகளின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள எல்ஜி நிறுவனத்தின் இந்திய அங்கமான எல்ஜி இந்தியா நிறுவனம், இன்னும் 3 முதல் 4 ஆண்டுகளுக்குள், எல்ஜி நிறுவனத்தின் (கொரியா) விற்பனை அளவை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (தென்மேற்கு ஆசியா) மற்றும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சூன் வோன் கூறியதாவது, தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு, இந்திய மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனையில் தங்கள் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் மற்ற துணை நிறுவனங்களை விட இந்திய அங்கமான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரை‌வேட் லிமிடெட் நிறுவனமான விற்பனையில் முன்னிலை வகிக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விசயம். புதுப்புது மாடல் உபகரணங்களை அறிமுகப்படுத்தி, வர்த்தகத்தை விரிவுபடுத்தியதே விற்பனையில் முன்னணி வகிப்பதற்கான காரணம் என்று அவர் கூறினார். எல்ஜி இந்தியா நிறுவன தயாரிப்புகளின் விற்பனை மூலம் தங்களுக்கு வருவாயாக 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ.15,500 கோடி) கிடைத்துள்ளதாகவும், அதேபோல், கொரியாவில் தங்களுக்கு கிடைத்திருக்கும் வருவாய் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த ஆண்டில், மட்டும் ரூ. 20 ஆயிரம் கோடி அளவிற்கு ஈட்ட உள்ளதாக அவர் தெரிவித்தார். எல்ஜி நிறுவனம், இந்தியாவில் மொபைல்போ்னகள் மற்றும் தொலைக்காட்சிகளின் விற்பனை அபரிமிதமான வளர்ச்சியிலும், கன்வென்சனல் கேதோடு ரே டியூப் டெக்னாலஜியிலான் எல்சிடி மற்றும் பிளாட் டிவிக்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், ஹோம் அப்ளையன்சன்ஸ்களின் விற்பனை‌யும் குறிப்பிடும்படியாக உள்ளது. தங்கள் நிறுவனத்திற்கு இதுவரை, கொரியா, சீனா மற்றும் இந்தோ‌னேசியா உள்ளிட்ட இடங்களில் மட்டுமே உற்பத்தி யூனிட் இருந்ததாகவும், தற்போது இந்தியாவின் வளர்ச்சியைப் பார்த்து, இந்தியாவிலும் உற்பத்தி யூனிட்டை அமைக்க திட்டமிட்டுள்ளோம். தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் அமோக வரவேற்பு இருப்பதால் இந்தியாவில் உள்ள உற்பத்தி யூனிட்டில் உற்பத்தியை 2 மடங்கு அளவிற்கு உயர்த்த உள்ள‌ோம். இதற்காக, ரூ. 800 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மார்க்கெட்டிங் செலவிற்காக ரூ. 700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)