பதிவு செய்த நாள்
16 ஏப்2011
14:40
புவனேஸ்வர் : சரக்குகளை கையாளும் விதம் குறைந்ததையடுத்து, 2020ம் ஆண்டில் சரக்கு கையாளும் திறனை மூன்று மடங்கு அளவிற்கு உயர்த்த திட்டமி்ட்டுள்ளதாக பாரதீப் துறைமுக டிரஸ்ட் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த பாரதீப் போர்ட் டிரஸ்ட் தலைவர் ஜி.ஜே.ராவ் கூறியதாவது, பாரதீப் துறைமுகம், தற்போதைய அளவில், 76 மில்லியன் டன் கெபாசிட்டி திறனுடன் செயல்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டிற்குள், துறைமுகம் தனது கெபாசிட்டியை 3 மடங்கு அளவிற்கு உயர்த்தி அதாவது 237 மில்லியன் டன் என்ற அளவில் சேவை செய்ய உள்ளதாக தெரிவித்தார். இந்த கொள்ளளவு அதிகரிப்பில் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மிகுந்த பலனடையும் என்றும், இதமட்டுமல்லாது, துறைமுகத்தில் புதிதாக ஆயில் ஜெட்டி, மற்றும் மல்டிபர்போஸ் பெர்த் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளது. 2009-10ம் நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து 57.01 மில்லியன் டன்னாக இருந்ததாகவும், 2010-11ம் நிதியாண்டில் இது, 56 மில்லியன் டன்னாக சரிவடைந்துள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில், 1.72 சதவீதம் குறைவு ஆகும். சரிவை நிவர்த்தி செய்ய செயல்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். துறைமுகத்தின் கொள்ளளவு (கெபாசிட்டி) 237 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் பட்சத்தில், நாட்டிலேயே முதன்மையான துறைமுகம் தாங்கள் திகழ வாய்ப்பிருதாகவும், தற்போதைய அளவில், தாங்கள் 5ம் இடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|