பதிவு செய்த நாள்
16 ஏப்2011
17:01
மும்பை : இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், நிறுவன விற்பனை, சர்வதேச அளவில் 9 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் நிறுவனத்தின் சர்வதேச விற்பனை மார்ச் மாதத்தில் மட்டும் 9 சதவீதம் அதிகரித்து 1.10 லட்சமாக உள்ளது. 2010-11ம் நிதியாண்டில், விற்பனை 24 சதவீதம் அதிகரித்து 1.08 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஜாக்குவர் லேண்ட் ரோவர், டாடா பாசேஞ்சர், கமர்சியல் வாகனங்கள், டாடா, டாடா டேஹூ, டாடா ஹிஸ்பா உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இந்த வாகனங்களின் விற்பனை 19 சதவீதம் அதிகரித்து 56,814 என்ற அளவிலும், பயணிகள் வாகனங்களின் விற்பனை 24 சதவீதம் அதிகரித்து 5.68 லட்சம் என்ற அளவிலும், ஜாக்குவார் லேண்ட் ரோவர் 2 சதவீதம் அதிகரித்து 24,101 என்ற அளவிலும், பிரீமியம் ரக வாகனங்களின் விற்பனை 25 சதவீதம் அதிகரித்து 2.41 லட்சம் என்ற அளவில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|