பதிவு செய்த நாள்
19 ஏப்2011
12:50
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி பேங்க, இந்த நிதியாண்டில், புதிதாக 275 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஹெச்டிஎப்சி பேங்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதைய அளவில், தங்கள் வங்கிக்கு 1725 கிளைகள் உள்ளதாகவும், விரைவில் வங்கி கிளைகளின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல், 779 நகரங்களில் சேவை அளித்துவரும் தங்கள் வங்கி, 1000 நகரங்களில் சேவையை வழங்க தி்ட்டமிட்டுள்ளது. ஹாங்காங் மற்றும் பஹ்ரைனில் சேவை வழங்கி வருகிறோம். செஞ்சூரியன் பேங்க் ஆப் பஞ்சாப் வங்கியை கையகப்படுத்தியதன் மூலம், 2008ம் ஆண்டில் தங்கள் வங்கி வாடிக்கையாளர்களி்ன் எண்ணிக்கை 1.8 கோடி என்ற அளவில் உள்ளது. 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான இந்த நிதியாண்டின் காலாண்டில், வங்கியின் நிகரலாபம் 33 சதவீதம் அதிகரித்து ரூ. 1,088 கோடியாக உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|