பதிவு செய்த நாள்
19 ஏப்2011
14:34
புதுடில்லி : நாட்டின் சிறிய நகரங்களில், நானோ கார்களுக்காக பிரத்யேக ஷோரூம்களை திறக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நிறுவனத்தின் முத்தாய்ப்பான தயாரிப்பான மினிடிரக் ஏசின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, இதேபோல் பிரத்யேக ஷோரூம்களை அமைத்தோம். அதன்பலனாக விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்தது. இதனையடுத்து, நானோ காரின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, சிறு மற்றும் நடுத்தர நகரங்களில் நானோ கார்களுக்கென பிரத்யேக ஷோரூம் அமைக்கப்பட உள்ளது. 600 புதிய விற்பனை மையங்கள் திறக்கப்பட உள்ளன. தற்போதைய அளவில், நிறுவனத்திற்கு 210 அக்சஸ் பாயிண்ட்களும், 151 அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களும் இயங்கி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|