பதிவு செய்த நாள்
20 ஏப்2011
11:18
மும்பை : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் முதன்மையான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அடிப்படை வட்டி விகிதம் மற்றும் கடன் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அடிப்படை வட்டி விகிதம் மற்றும் கடன் வட்டி விகிதம் இரண்டும் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட உள்ளது. இந்த புதிய வட்டி விகிதம், ஏப்ரல் 25ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வர உள்ளது. இந்த புதிய வட்டி விகிதத்தின் மூலம், வீடு மற்றும் வாகன கடன் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், டெர்ம டெபாசிட்களில் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|