பதிவு செய்த நாள்
20 ஏப்2011
12:51
மதுரை: மதுரையில் பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதால், பூக்களின் விலை சரிந்து வருகிறது. பங்குனி, சித்திரை மாதங்களில் பூ வரத்து அதிகம் இருக்கும். இதனால், கடந்த சில மாதங்களாகவே, விலை உயர்வில் பெரியதொரு மாற்றம் இல்லாமல் சீராக இருந்தது. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக பூக்களின் விலை உயர்ந்திருந்தது. ஆற்றில் அழகர் இறங்கிய நிகழ்ச்சி நிறைவு அடைந்தவுடன் பூக்களின் விலை சரிந்து வருகிறது. மல்லிகை கிலோ 120 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும், அரளி 100ரூபாயிலிருந்து 30ரூபாயாகவும் விலை சரிந்தது. இது குறித்து பூ வியாபாரி சங்கத்தலைவர் ராமசந்திரன் கூறியதாவது: மல்லிகை கிலோ 120 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக குறைந்துள்ளது. இது விவசாயிகளின் எடுப்புக் கூலிக்கு கூட கட்டாது. இதனால் விவசாயிகள் செடிகளிலே பூக்களை விட்டு வைக்கும் நிலை ஏற்படும். சென்ட் தொழிற்சாலை அமைத்தால் தான் பூ வரத்து அதிகம் இருக்கும் காலங்களில் இத்தகைய விலை சரிவு ஏற்படாமல் நிரந்தர விலை ஏற்படும். நேற்று அரளி கிலோ 30ரூபாய், ரோஸ் 50 ரூபாய், சம்பங்கி 40 ரூபாய், செவந்தி 50 ரூபாய், வாடாமல்லி 25 ரூபாய், கோழிக்கொண்டை 20 ரூபாய், கனகாம்பரம் 280ரூபாய்க்கு விற்றது என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|