பதிவு செய்த நாள்
20 ஏப்2011
14:58
பெர்லின் : சாவி இல்லாமல் திறக்கும் கீ லெஸ் என்டரி தொழில்நுட்பம், ஸ்டாப்ஸ்டார்ட் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் , பழமை மாறாத வடிவமைப்புடன், அதே மவுசுடன் கூடிய மூன்றாம் தலைமுறை பீட்டில் காரை வோக்ஸ்வாகன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 1938ம் ஆண்டு ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்ட பீட்டிலுக்கு இன்னமும் மவுசு குறையாமல் இருப்பதை கண்டு ஆட்டோமொபைல் துறையினரே வியப்பு தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு, அவ்வப்போது பீட்டிலில் புதிய அம்சங்களை புகுத்தி அறிமுகம் செய்து வருகிறது வோக்ஸ்வேகன். முன்பக்கம் கண்ணை கவரும் கீழ்பக்க கிரில், ரன்னிங் விளக்குகள்(எல்இடி), பின்பக்கம் வைன்டு சீல்டு, கண்ணாடி கூரை என அனைத்து இடங்களிலும் வோக்ஸ்வேகனின் கைப்பக்குவம் பளிச்சிடுகிறது. சாவி இல்லாமல் கதவை திறக்கும் அதிநவீன கீ லெஸ் என்ட்ரி தொழில்நுட்பம், புதிய நேவிகேஷன் சிஸ்டம், மனதை மயக்கும் வண்ணங்களில் லெதர் இருக்கைகள், ஸ்டாப்ஸ்டார்ட் தொழில்நுட்பம் ஆகியவையும் பீட்டிலின் மதிப்பை உயர்த்துகிறது. மேலும், எரிபொருள் சிக்கனத்தை தரும் வோக்ஸ்வேகனின் புளுமோஷன் தொழில்நுட்ப வசதிகளும் பீட்டிலில் உள்ளது. 105பிஎஸ் திறனை வெளிப்படுத்தும் 1.2லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின், 160 பிஎஸ் திறனை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின், 200 பிஎஸ் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களில் புதிய பீட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பீட்டில் அடுத்த ஆண்டு ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் தற்போதுள்ள பீட்டில் கார் போன்றே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|