பதிவு செய்த நாள்
20 ஏப்2011
15:58
மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 349.15 புள்ளிகள் அதிகரித்து 19470.98 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 110.90 புள்ளிகள் அதிகரித்து 5851.65 என்ற அளவிலும் இருந்தது. பங்குமுதலீ்ட்டாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய நாளாகவே இது அமைந்துள்ளது என்று கூறுவது மிகையாகாது. டிசிஎஸ், ஓஎன்ஜிசி, விப்ரோ, எஸ்பிஐ, என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், பார்தி, ஐடிசி, ஹெச்டிஎப்சி, இன்போசிஸ், பெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல், செயில், ஹிண்டால்கோ, ஸ்டெர்லைட், இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், கோடக் மகிந்திரா பேங்க் மற்றும் டிஎல்எப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் ஏறுமுகத்திலும், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ஹீரோ ஹோண்டா, லார்சன் அண்ட் டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|