பதிவு செய்த நாள்
20 ஏப்2011
16:40
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான், தமது அண்டை நாடான இந்தியாவிலிருந்து குறைந்த விலையில், மின்சாரம் பெற உத்தேசித்திருப்பதாக பாகிஸ்தான் வர்த்தகத்துறை செயலாளர் ஜாபர் மெக்மூத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மெகமூத் கூறியதாவது, பாகிஸ்தான் மின்சாரத் தட்டுப்பாட்டால் பெரும் அவதிப்பட்டு வருகிறது. இந்தியாவிடமிருந்து மின்சாரம் பெறுவது தொடர்பாக, ஏப்ரல் 27 மற்றும் 28ம் தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள இந்திய - பாகிஸ்தான் வர்த்தகத்துறை செயலாளர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. ஆனால், இதுகுறித்த எவ்வித தீர்மான முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ள நிலையில், மின்சார உதவி குறித்த விவாதம் எழுந்திருப்பது முக்கியத்துவம் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|