பதிவு செய்த நாள்
21 ஏப்2011
01:51
புதுடில்லி:மத்திய அரசு, 5 லட்சம் டன்சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் சர்வ தேசசந்தையில்சர்க்கரை விலை குறைந்துள்ளதால், ஏற்றுமதியில் மிகப் பெரிய அளவில் லாபம் இருக்காது என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின்சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை கட்டுக்குள் உள்ளது. இதன் காரணமாக,சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய உணவு அமைச்சகத்தின், அமைச்சரவைக் குழு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. ஆனால் இது குறித்த அரசாணை தற்போது தான் வெளியிடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில்சர்வதேசசந்தையில்சர்க்கரை விலை 11சதவீதம்சரிந்து ஒரு டன் 627 டாலராக குறைந் துள்ளது. இதனால் வட மாநிலங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளின் ஏற்றுமதி லாப வரம்பு குறைந்த அளவிற்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், உத்தரபிரதேசத்தை விட, மகாராஷ்ட்ர ஆலைகளின் சர்க்கரை விலை குறைவாக உள்ளதால், ஏற்றுமதி மூலம் இந்த ஆலைகள் கணிசமான லாபத்தை பெற முடியும். மகாராஷ்ட்ராவில்,சர்க்கரை ஆலைகளுக்கு அருகிலேயே துறைமுகங்கள் அமைந்துள்ளதும் லாப வரம்பை அதிகரிக்க உதவும் என, இந்தியசர்க்கரை ஆலைகள் கழகத்தின் தலைமை இயக்குனர் அபினேஷ் வர்மா தெரிவித்தார். மத்திய அரசு,சர்க்கரை ஏற்றுமதிக்கு காலம் கடந்து அனுமதி வழங்கியுள்ளபோதிலும், இந்த நடவடிக்கையால் ஆலைகளின் வருவாய் உயரும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|