பதிவு செய்த நாள்
21 ஏப்2011
01:53
புதுடில்லி:இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், வெளிநாட்டு அரசுகள் 20சதவீத பங்கு முதலீடுமேற்கொள்வதற்கு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள, நிறுவனங்களில், அயல்நாட்டு அரசுக்கு சொந்தமான நிதிமேலாண்மை நிறுவனங்கள் அல்லது முதலீட்டு நிறுவனங்கள், 10சதவீத அளவிற்கு பங்கு முதலீடுமேற்கொள்ள அனுமதி உள்ளது.தற்போது, இதனை 20சதவீதமாக உயர்த்த 'செபி' அமைப்பு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்து முதலீட்டிற்கான அனுமதியை 'செபி' வழங்கும்.இந்த திட்டத்திற்கு, கடந்த மார்ச் மாதம் 25ம்தேதி நடைபெற்ற 'செபி' யின் நிர்வாக கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.வெளிநாட்டு அரசுகளுக்கு சொந்தமான நிதிமேலாண்மை நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் பங்கு முதலீடுமேற்கொள்ளும்போது, ஒரே அரசு குழுமமாக கருதப்படுகின்றன. அதனால் இவை, அன்னிய முதலீட்டு நிறுவனங்களாக கருதப்பட்டு, குறிப்பிட்ட வரம்பிற்குமேலாக பங்கு முதலீடுமேற்கொள்ள முடியாத நிலை இருந்தது.இதனைத் தவிர்க்கவும், அன்னிய அரசுகளின் நிதி நிறுவனங்களையும், இதர அன்னிய முதலீட்டு நிறுவனங்களையும்வேறுபடுத்தவும், மத்திய அரசு பல்வேறு நாடுகளுடன் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் (சி.ஈ.சி.ஏ) செய்து கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தப்படி, இனி அயல்நாட்டு அரசுகளின் நிதிமேலாண்மை நிறுவனங்கள் அல்லது முதலீட்டு நிறுவனங்கள் முன்னுரிமை அடிப்படையில் இந்தியநிறுவனங்களில் முதலீடுமேற்கொள்ளலாம். இந்நடவடிக்கையை தொடர்ந்து, அன்னிய அரசுகளின் நிதிமேலாண்மை நிறுவனங்கள் , இந்திய பங்குச்சந்தைகளில் பட்டிய லிடப்பட்டுள்ள நிறுவனங்களில் 20சதவீதம் வரை முதலீடுமேற்கொள்ள 'செபி' ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள் ளது.இந்த புதிய நடைமுறையால், இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் பயன் பெறும். இந்தியாவிலும் பாதுகாப்பான அன்னிய முதலீடு அதிகரிக்கும். சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான தமாசெக் மற்றும் ஜி.ஐ.சி நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் பங்கு முதலீடுமேற்கொண்டுள்ளன. தற்போதைய விதிமுறைப்படி, இந்த இரு நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவிற்குமேல் பங்கு முதலீட்டைமேற்கொள்ள முடியாமல் உள்ளன. 'செபி'யின் புதிய விதிமுறையால், இனி சிங்கப்பூர் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் பங்கு முதலீட்டை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|