5லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒப்புதல்5லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒப்புதல் ... சென்ற 2010 - 11ம் நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 37.5 சதவீதம் வளர்ச்சி சென்ற 2010 - 11ம் நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 37.5 சதவீதம் வளர்ச்சி ...
இந்தியாவில் வெளிநாட்டு அரசுகள் 20சதவீத பங்கு முதலீட்டுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2011
01:53

புதுடில்லி:இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், வெளிநாட்டு அரசுகள் 20சதவீத பங்கு முதலீடுமேற்கொள்வதற்கு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள, நிறுவனங்களில், அயல்நாட்டு அரசுக்கு சொந்தமான நிதிமேலாண்மை நிறுவனங்கள் அல்லது முதலீட்டு நிறுவனங்கள், 10சதவீத அளவிற்கு பங்கு முதலீடுமேற்கொள்ள அனுமதி உள்ளது.தற்போது, இதனை 20சதவீதமாக உயர்த்த 'செபி' அமைப்பு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், அந்தந்த நிறுவனங்களைப் பொறுத்து முதலீட்டிற்கான அனுமதியை 'செபி' வழங்கும்.இந்த திட்டத்திற்கு, கடந்த மார்ச் மாதம் 25ம்தேதி நடைபெற்ற 'செபி' யின் நிர்வாக கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.வெளிநாட்டு அரசுகளுக்கு சொந்தமான நிதிமேலாண்மை நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் பங்கு முதலீடுமேற்கொள்ளும்போது, ஒரே அரசு குழுமமாக கருதப்படுகின்றன. அதனால் இவை, அன்னிய முதலீட்டு நிறுவனங்களாக கருதப்பட்டு, குறிப்பிட்ட வரம்பிற்குமேலாக பங்கு முதலீடுமேற்கொள்ள முடியாத நிலை இருந்தது.இதனைத் தவிர்க்கவும், அன்னிய அரசுகளின் நிதி நிறுவனங்களையும், இதர அன்னிய முதலீட்டு நிறுவனங்களையும்வேறுபடுத்தவும், மத்திய அரசு பல்வேறு நாடுகளுடன் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் (சி.ஈ.சி.ஏ) செய்து கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தப்படி, இனி அயல்நாட்டு அரசுகளின் நிதிமேலாண்மை நிறுவனங்கள் அல்லது முதலீட்டு நிறுவனங்கள் முன்னுரிமை அடிப்படையில் இந்தியநிறுவனங்களில் முதலீடுமேற்கொள்ளலாம். இந்நடவடிக்கையை தொடர்ந்து, அன்னிய அரசுகளின் நிதிமேலாண்மை நிறுவனங்கள் , இந்திய பங்குச்சந்தைகளில் பட்டிய லிடப்பட்டுள்ள நிறுவனங்களில் 20சதவீதம் வரை முதலீடுமேற்கொள்ள 'செபி' ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள் ளது.இந்த புதிய நடைமுறையால், இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் பயன் பெறும். இந்தியாவிலும் பாதுகாப்பான அன்னிய முதலீடு அதிகரிக்கும். சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான தமாசெக் மற்றும் ஜி.ஐ.சி நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் பங்கு முதலீடுமேற்கொண்டுள்ளன. தற்போதைய விதிமுறைப்படி, இந்த இரு நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவிற்குமேல் பங்கு முதலீட்டைமேற்கொள்ள முடியாமல் உள்ளன. 'செபி'யின் புதிய விதிமுறையால், இனி சிங்கப்பூர் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் பங்கு முதலீட்டை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)