பதிவு செய்த நாள்
22 ஏப்2011
11:45
புதுடில்லி : எப்எம்சிஜி வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள நெஸ்லே இந்தியா நிறுவனம், மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவன நிகரலாபம் 26.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, நெஸ்லே இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவன நிகரலாபம் 26.7 சதவீதம் அதிகரித்து ரூ. 255.7 கோடி ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், நிறுவன நிகரலாபம் ரூ. 201.8 கோடியாக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவன விற்பனையும் 22.3 சதவீதம் அதிகரித்து ரூ. 1,809.9 கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. உள்நாட்டு விற்பனை 23.1 சதவீதமும், ஏற்றுமதி 10.2 சதவீதமும் அதிகரித்துள்ளதாக மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|