பதிவு செய்த நாள்
22 ஏப்2011
16:29
புதுடில்லி : நாட்டின் வடக்குப்பகுதிகளில், தங்கள் நிறுவன சேவைக்கு அமோக வரவேற்பு உள்ளதாலும் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், புதிய போயிங் 777எப் விமானத்தை சேவைக்கு உட்படுத்த இருப்பதாக பெட்எக்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த பெட்எக்ஸ் எக்ஸ்பிரஸ் (இந்திய செயல்பாடுகள் பிரிவு) துணை தலைவர் கென்னத் கோவல் கூறியதாவது, இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் வாழும் மக்களின் தேவைக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், புதிய போயிங் 777 எப் ரக விமானத்தை சேவைக்கு உட்படுத்தி உள்ளோம். இந்த விமானம், டில்லியிலிருந்து அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு சேவையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். வாரத்திற்கு 5 முறையிலான சேவைகளை, இந்த விமானம் மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|