பதிவு செய்த நாள்
22 ஏப்2011
16:41
ஐதராபாத் : அடுத்த ஆண்டு இறுதிக்குள், ஏர்போர்ட் ஹாஸ்பிடல் சேவையை துவக்க உள்ளதாக அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. ஐதராபாத்தில், நோயாளிகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார நலன் குறித்த 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்குப் பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழும நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரீத்தா ரெட்டி கூறியதாவது, இதன்மூலம் ஏர்போர்ட் ஹாஸ்பிடல் சேவையை துவக்க உள்ள முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை தங்கள் குழுமம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத்தில், முதல் ஏர்போர்ட் ஹாஸ்பிடலை துவக்க தீர்மானித்திருப்பதாகவும், பின், படிப்படியாக, மற்ற ஏர்போர்ட்களிலும் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்திற்காக, ரூ. 1,800 கோடி ஒதுக்கியுள்ளோம். நவி மும்பை மற்றும் நாக்பூரில் இன்னும் 2 ஆண்டுகளில் இந்த ஹாஸ்பிடல் சேவை துவங்க வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் பார்மா ஸ்டோர் வர்த்தகத்தையும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். தற்போதைய அளவில், நாடுமுழுவதும் 1,200 ஸ்டோர்களை நிர்வகித்து வரும் தங்கள் குழுமம், இந்தாண்டு இறுதிக்குள் 500 முதல் 600 ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ளோம். நர்சிங் பயிற்சி பள்ளிகளையும் 10 என்ற அளவில் இருந்து 15 ஆக உயர்த்த திட்டமி்ட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|