பதிவு செய்த நாள்
25 ஏப்2011
13:55
புதுடில்லி : சர்வதேச அளவில், பலவகை பிரிவுகளின் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஜேகே குழுமம், மின்துறையில் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான ரகுபதி சின்கானியா கூறியதாவது, இந்த தகவல் முற்றிலும் உண்மைதான் என்றும், மின்துறையில் களமிறங்க உள்ள தாங்கள் முதற்கட்டமாக தெர்மல் பவர் பிளாண்டை அமைக்க உள்ளோம். இதற்காக, மத்தியபிரதேச மாநிலம் ஜான்சியில் 1,360 மெகாவாட்ஸ் பவர் பிளாண்டை அமைக்க உள்ளோம். ரூ. 1,300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த பவர் பிளாண்ட்டின் செயல்பாடுகள் 2 ஆண்டுகளில் தொடங்கும் என்றும், முதற்கட்டமாக, 660 மெகாவாட்ஸ் மின்திறன் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், விரைவில், செயல்பாடுகள் முழுமைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். ஜேகே குழுமம், டயர்கள், பேப்பர்கள், சிமெண்ட், சர்க்கரை மற்றும் விதைகள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|