பதிவு செய்த நாள்
26 ஏப்2011
10:45
மும்பை : ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள தோஷிபா நிறுவனம், இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த தோஷிபா குழுமத்தின் இந்திய அங்கமான தோஷிபா இந்தியா (கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு) உயர் அதிகாரி பிரணாப் மொகந்தி கூறியதாவது, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில், மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தங்கள் நிறுவனம், இந்தியாவில் வர்த்தகம் மற்றும் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது, அதன்காரணமாக, ரூ. 450 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் உபகரணங்கள் உற்பத்தி யூனிட் அமைக்க உள்ளது. நிறுவன மார்க்கெட் பங்கை, 1 சதவீதத்திலிருந்து, 3 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. 2011ம் ஆண்டில், 3 லட்சம் டிவிக்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், 2012ம் ஆண்டில், 1.2 மி்ல்லியன் டிவிக்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் எல்சிடி டிவிக்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், மற்றும் வாஷிங் மெஷின்கள் உற்பத்தி செய்வதற்கான யூனிட்கள் அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|