பதிவு செய்த நாள்
26 ஏப்2011
11:57
மும்பை : உற்பத்திப் பொருட்களின் வரத்து குறைவால், இந்திய யூனிட்களில் கார் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் காரணமாக அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, அங்கிருந்து வாகன உற்பத்திப் பொருட்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் இயங்கி வரும் தங்களது யூனிட்களில், கார் உற்பத்தி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மே மாதம் வரை இந்த நிலையே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள தங்களது யூனிட்கள், சுனாமிக்குப் பிறகு முற்றிலுமாக முடங்கி உள்ளதாகவும், ஏப்ரல் 11ம் தேதிக்கு பிறகு அது சிறிது சிறிதாக செயல்பட துவங்கியுள்ளதாகவும் மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|