பதிவு செய்த நாள்
26 ஏப்2011
13:53
புதுடில்லி: மார்ச் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மாருதி நிறுவனத்தின் நிகர லாபம் உயர்ந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் இடையிலான கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மாருதி சுசூகி, ரூ.659.86 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த 2009-10 ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டின் நிகர லாபத்துடன் (ரூ.656.55 கோடி) ஒப்பிடும்போது, தற்போது நிகர லாபம் சிறிதளவே அதிகரித்துள்ளது. இருப்பினும், மூன்றாவது காலாண்டில் நிகர லாபத்தில் 18 சதவீத சரிவை சந்தித்த மாருதிக்கு, நான்காவது காலாண்டில் லாபம் உயர்ந்துள்ளதால் சற்று நிம்மதியடைந்துள்ளது. அதேசமயம், நிறுவனத்தின் மொத்த வருவாய் 18.93 சதவீதம் உயர்ந்து, ரூ.10,092.18 கோடியாக அதிகரித்துளளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 8,485.83 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|