பதிவு செய்த நாள்
26 ஏப்2011
16:00
மும்பை : வாரவர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று, சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், சரிவுடனேயே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 38.96 புள்ளிகள் குறைந்து 19545.35 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 6.10 புள்ளிகள் குறைந்து 5868.40 என்ற அளவில் உள்ளது. ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி, ஐடிசி, இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்டிஎப்சி பேங்க், லார்சன் அண்ட் டூப்ரோ, செயில், என்டிபிசி, ஆக்சிஸ் பேங்க், மாருதி, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் இறங்குமுகத்தில் இருந்தபோதிலும், ஹிண்டால்கோ, ஷீமன்ஸ், பீபிசிஎல், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், எஸ்பிஐ, இன்போசிஸ் மற்றும் ஐசிஐசிஐ நிறுவன பங்குகளின் மதிப்பு ஏறுமுகத்தில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|