பதிவு செய்த நாள்
27 ஏப்2011
02:16
டோக்கியோ:ஜப்பான் நாட்டைச்சேர்ந்தசோனி நிறுவனம், முதன் முறையாக கையடக்க கம்ப்யூட்டரை (டேப்ளட் பிசி) அறிமுகப்படுத்தியுள்ளது. இது, ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐபேட்' சாதனத்திற்கு கடும் போட் டியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சோனி நிறுவனம், செவ்வாய்கிழமை அன்றுடோக்கி யோவில் 'எஸ்1' மற்றும் 'எஸ் 2' என்ற பெயரில் இந்த புதிய சாதனங்களை அறிமுகப் படுத் தியது. 9.4 அங்குல திரை கொண்ட 'எஸ்1' சாதனம் 3ஜி, 4ஜி மற்றும் வை-பை தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. இதில், கம்ப்யூட்டர் சார்ந்த செயல்பாடுகள், வீடியோ விளையாட்டுகள் ஆகியவற்றை மேற் கொள்ளலாம். அதிவிரை வாக திரைப்படங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 5.5 அங்குல திரையுடன் 'எஸ் 2' சாதனமும் இத்தகைய வசதிகளுடன் வெளிவந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் ஆணைத் தொகுப்பில் இயங்கும் வண்ணம் இந்த சாதனங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 29,000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'ஐபேட்' என்ற கையடக்க கம்ப்யூட்டரை (டேப்ளட் பிசி) அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அண்மையில் 'ஐபேட் 2' அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கையடக்க கம்ப்யூட்டர் சந்தை யில் ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐபேட்' முதலிடத்தில் உள்ளது. சந்தையில் ஏற்கெனவே, சாம்சங் நிறுவனத்தின் 'கேலக்சி', எச்.டி.சி நிறுவனத்தின் 'பிளையர்',மோட்டோரோலாவின் 'ஜும்', எல்.ஜி எலக்ட்ரானிக்சின் 'ஜி ஸ்லேட்'டேப்ளட் பிசி சாதனங்கள் உள்ளன. எனினும் அடுத்த ஓராண்டிற்குள்சோனியின் புதிய சாதனங்கள் சந்தையில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் க”வோ ஹிராய் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|