பதிவு செய்த நாள்
27 ஏப்2011
02:17
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்க்கிழமையன்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இதர ஆசிய பங்கு சந்தைகளில், பங்கு வியாபாரம் மந்தமாக இருந்ததால், இந்திய பங்கு சந்தைகளில் மதியம் வரை, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து காணப்பட்டது. இந்நிலையில், ஐரோப்பிய பங்கு சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்தது. இதையடுத்து, மதியத்திற்கு பிறகு, இந்திய பங்கு சந்தைகளிலும் பங்கு வியாபாரம் ஓரளவிற்கு நன்கு இருந்தது.இந்திய பங்கு சந்தைகளில் மருந்து, பொறியியல், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கு தேவைப்பாடு குறைவாக இருந்தது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 38.96 புள்ளிகள் சரிவடைந்து, 19,545.35 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 19,626.13 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 19,306.92 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 20 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 6.10 புள்ளிகள் குறைந்து, 5,868.40 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,893.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,791.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|