பதிவு செய்த நாள்
27 ஏப்2011
08:48
மும்பை : இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐடிபிஐ வங்கி, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் காலாண்டில், வங்கி நிகரலாபம் 62.13 சதவீதம் அதிகரித்து ரூ. 516.25 கோடியாக உள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த ஐடிபிஐ வங்கி தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆர் எம் மல்லா கூறியதாவது, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் காலாண்டில், ரூ. 1,650.32 கோடியாக உள்ளதாவும், கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில், இது ரூ. 1,031.13 கோடியாக இருந்தது. சதவீதத்தின் அடிப்படையில், இது 60 சதவீதத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டின், நான்காம் காலாண்டில் வங்கி ரூ. 318.41 கோடி நிகரலாபமாக ஈட்டியிருந்தது. அதேபோல், நிகர வட்டி வருமானமும் 91.9 சதவீதம் அதிகரித்து ரூ. 4,329 கோடியாக பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டில், இது ரூ. 2256 கோடியாக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில், இது 20 சதவீதம் அதிகரித்து ரூ. 676 கோடியாக (முந்தைய ஆண்டின் இதேகாலகட்டத்தில் ரூ. 545 கோடி)இருந்தது எனவும், இதன்மூலம், தங்கள் வங்கி மீதான மதிப்பு மக்களிடையே அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|