பதிவு செய்த நாள்
27 ஏப்2011
15:02
மும்பை : வாகனங்களுக்கான லூப்ரிகண்ட் ஆயில் தயாரிப்பு நிறுவனமான கேஸ்ட்ரோல் இந்தியா நிறுவனம், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 16.55 சதவீதம் நிகரலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கேஸ்ட்ரோல் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டின் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகரலாபம் 16.55 சதவீதம் அதிகரித்து ரூ. 136.6 கோடியாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ரூ.117.2 கோடி நிகரலாபமாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.அதேபோல், நிறுவன விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாத வரையிலான காலகட்டத்தில், ரூ. 654 கோடி என்ற அளவில் இருந்த தங்கள் நிறுவன விற்பனை, இந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், ரூ. 750.7 கோடியாக அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|