பதிவு செய்த நாள்
28 ஏப்2011
01:40
புதுடில்லி:சென்ற 2010-11ம் நிதியாண்டில்சு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதில்சு தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை விட பொதுத் துறையை சேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி) நிறுவனத்தின்புதிய பிரிமிய வருவாய்சென்ற நிதியாண்டில் நல்ல அளவில் அதிகரித்துள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டில் தனியார் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் 2 சதவீத அளவிற்கே வளர்ச்சி யடைந் துள்ளது. அதேசமயம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த பிரிமிய வருவாய் 23 சதவீதம் அதிகரித்து 86 ஆயிரத்து 444 கோடி ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளது.காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (இரிடா) சென்ற 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கான புதிய நெறிமுறைகளை அறிவித்தது. இதனால்இத்துறையில் ஈடுபடும் நிறுவனங்களின்குறிப்பிட்ட சில திட்டங் களின் மீதான பிரிமிய வருவாய் குறைந்து போனது.தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின்சு புதிய பிரிமிய வருவாய்சென்ற நிதியாண்டில் 39 ஆயிரத்து 381 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுஇதற்கு முந்தைய 2009-10ம் நிதியாண்டில்சு 38 ஆயிரத்து 399 கோடி ரூபாயாக இருந்தது. இதையடுத்துசு தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு 35.14 சதவீதத்திலிருந்து 31.30 சதவீதமாக குறைந்துள்ளது.இதே ஆண்டுகளில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பிரிமிய வருவாய்70 ஆயிரத்து 891 கோடி ரூபாயிலிருந்து 86 ஆயிரத்து 445 கோடி ரூபாயாக வளர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து ஆயுள் காப்பீட்டு துறையில் இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 64.86 சதவீதத்திலிருந்து 68.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு சென்ற நிதியாண்டில் அதிகரித்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாகசு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்கு உள்ளதால் பல தனி நபர்கள்சு ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் அதிகளவு முதலீடு செய்துள்ளனர். இரண்டாவதாகசு இந்நிறுவனத்தின் பங்குச் சாராதபழமையான காப்பீட்டு திட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். மூன்றாவதாகசு இந்நிறுவனத்தின் ஓய்வூதிய ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கு சிறந்த அளவு வரவேற்பு இருந்தது.ஆயுள் காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்களான ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடன்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதை தொடர்ந்துஎஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் (6.01 சதவீதம்) எச்.டி.எப்.சி லைப் (3.23 சதவீதம்) மற்றும் பஜாஜ் அலையன்ஸ் (2.75 சதவீதம்) ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பும் நிலையான அளவில் உயர்ந்துள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில் தற்போது 23 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றுள் பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி. நிறுவனம் தவிர 22 தனியார் நிறுவனங்கள் உள்ளன.தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு சென்ற நிதியாண்டில் குறைந்ததற்கு இந்நிறுவனங்கள் இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகசு ஆதாயம் அளிக்காத காப்பீட்டு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை என இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவேசு சென்ற நிதியாண்டில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் குறைந்து போனதாக தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|