பதிவு செய்த நாள்
28 ஏப்2011
01:41
தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக கடலை எண்ணெய் உட்படசு அனைத்து வகையான எண்ணெய் வகைகளின் விலைசு கடுமையாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நடப்பாண்டில்எண்ணெய் வித்துக்களின் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் எண்ணெய் வித்துக்களின் வரத்து முற்றிலும் நின்று விட்டது.தமிழகத்தில் குறைந்த அளவில் விளைந்த சூரியகாந்தி எள்கொப்பரை தேங்காய்நிலக்கடலை ஆகிய எண்ணெய் வித்துக்களை வடமாநில மற்றும் ஆந்திர வியாபாரிகள்அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்று விட்டனர். தமிழக எண்ணெய் மில்களுக்கு தேவையான நிலக்கடலை சூரியகாந்தி விதை கிடைக்கவில்லை. மேலும் மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவில் விலை உயர்வு ஏற்பட்டு வருகிறது.தமிழகத்தில் நிலக்கடலை சூரிய காந்தி எண்ணெய் விலை சில மாதங்களாக தினம் ஓர் விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. கடந்த வாரம் வரை லிட்டர்சு 80 ரூபாய்க்கு விற்ற கடலை எண்ணெய் தற்போது 88 ரூபாய்க்கு விற்கிறது. இதே போல் 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட15 லிட்டர் கொள்ளளவு கொண்ட கடலை எண்ணெய் டின் 1,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 88 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய்தற்போது96 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 15 லிட்டர் டின் 1,440 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் சூரிய காந்தி எண்ணெய் லிட்டருக்கு ஏழு ரூபாய் அதிகரித்து 77 ரூபாயாக உயர்ந்தது. இதே போல் 15 லிட்டர் டின் 1,050 ரூபாய்க்கு விற்றது 1,155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|