பதிவு செய்த நாள்
29 ஏப்2011
14:45
புதுடில்லி : மொபைல்போன் தயாரிப்பில் சர்வதேச அளவி்ல் முடிசூடா மன்னனாக விளங்கும் நோக்கியா நிறுவனம், மறுசீரமைப்பில் ஈடுபட உள்ளதாகவும், அதனகாரணமாக, 2012ம் ஆண்டிற்குள், இந்தியாவில் 300 ஊழியர்களும், சர்வதேச அளவில் 7 ஆயிரம் பணியிழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, நோக்கியா நிறுவன செய்தி்த்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நோக்கியா நிறுவனம், சிம்பயான் சாப்ட்வேர் பணிகளுக்காக முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான அசென்சருடன் கைகோர்த்துள்ளது. இதன்காரணமாக, சர்வதேச அளவில் பலர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் பிரிவில் பணியாற்றி வரும் 800 முதல் 900 பேர் பணியிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|