பதிவு செய்த நாள்
29 ஏப்2011
16:57
மும்பை : ஏப்ரல் மாதத்தில், நானோ கார் தவிர்த்து, மற்ற வாகனங்களின் உற்பத்தி கணிசமான அளவு குறைந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடப்பு ஏப்ரல் மாதத்தில், நிறுவன உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. எப்போதும் மார்ச் மாத இறுதியில், நிறுவன விற்பனை அதிகரிக்கும், அதேபோல, இந்த ஆண்டும் விற்பனை மற்றும் உற்பத்தி அதிகரித்தது. ஆனால், நிறுவன உற்பத்தி, ஏப்ரல் மாதத்தில், 15 முதல் 20 சதவீத அளவிற்கு குறைந்தது. இந்த சுழலில் தப்பியது நானோ கார் மட்டுமே. இந்த சுழலில், இண்டிகோ மற்றும் இண்டிகா கார்களின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதோடு மட்டுமல்லாமல், சஃபாரி, அரியா மற்றும் சுமோ கார்களின் உற்பத்தியும் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்த மாதத்தில், 15 ஆயிரம் நானோ கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தது. ( மார்ச் மாதத்தில், 9 ஆயிரம் நானோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது), இந்த நிதியாண்டின் மாதம் ஒன்றிற்கு 20 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆண்டிற்கு, 2.5 லட்சம் நானோ கார்கள், குஜராத் மாநிலம் சனந்த் உற்பத்தி யூனிட்டில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|